கடவுளின் படைப்புகளில் லட்சக்கணக்கான உயிர்கள் உண்டு.
84 லட்சம்
வகையான
உயிரினங்கள் உயிர்கள் உள்ளது
என
நம்
வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அவைகளில் புழு
பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், நீர்
வாழ்வன,
நிலத்தில் வாழ்வன
என
அனைத்தும் உயிர்களும் அடங்கும். அனைத்து உயிர்களும் பிறக்கின்றன; வாழ்கின்றன; ஒருநாள் மடிந்தும் போகின்றன. ஆனால்
இவைகள்
எல்லாவற்றையும் விட
மிகவும் உயர்ந்த பிறவி
மனிதப்பிறவியேயாகும். பிற
உயிரினங்களைப் போன்று
பிறந்தோம் – வாழ்ந்தோம் – மடிந்தோம் என்று
இருந்தால் பிற
உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் போகும்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் லட்சியம் என்ன?
நன்கு கல்வி பயில வேண்டும். நல்ல வேலையில் சேர வேண்டும். அல்லது சுயமாக தொழில் புரிய வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதன்மூலம் சகல வசதிகளையும் பெற வேண்டும். ஆடம்பரமாக வாழ வேண்டும். (கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், வீடு, வாகனம், நவீன ஆடம்பரங்கள் என சகல வசதிகளையும் அடைய பொருளாதாரம் முக்கியத் தேவையாக இருக்கிறது. எனவே பொருளாதாரத்தில் முன்னேற விரும்புகிறார் கள்.) அதிக பணம் சம்பாதித்தால் அதனால் சிறப்பான எதிர் காலமும், ஆரோக்கியமான வாழ்க்கையும், முழுமையான மகிழ்ச்சியும், மன நிறைவும், நிம்மதியும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் மேற்கண்ட அனைத்தும் கிடைக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவற்றால் எந்த மன மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைப்பதில்லை.
மனிதர்களுக்கென இவை எல்லாவற்றிற்கும் மேலானதான ஒரு லட்சியம் உள்ளது. அதுதான் உலகிலுள்ள வேறு எந்தபொருட்களாலும் அடைய இயலாத ஓர் உன்னதமான இன்பத்தைப் பெறுவது. அதுதான் உண்மையான இன்பம். அந்த இன்பத்தைப்பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த இன்பம் நமக்குள்ளேயே இருக்கின்றது. அது நம்மை விட்டு அகலாது. அதை யாரும் தரவும் இயலாது. பணத்தாலோ, வசதியாலோ, செல்வச் செழிப்பினாலோ, ஆடம்பரப் பொருட்களினாலோ இந்த சந்தோஷத்தை பெற முடியாது.
மிகவும் மேலான இந்த உயர்ந்த இன்ப நிலையை அடையும் முயற்சியில் ஈடுபடுவதற்காகவே நமது ஆன்மாவிற்கு மானிடப்பிறவி தரப்பட்டுள்ளது.
மனிதப் பிறவிக்கு என்று ஒரு நோக்கம் உள்ளது. அதுதான் முக்திநிலை அடைவது. அதுதான் மிக உயர்ந்த இன்ப நிலை.
“முக்தி’ என்ற சொல்லுக்கு பலவிதமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. முக்தி என்பது மனித நிலையிலிருந்து தெய்வநிலைக்கு மாற்றமடைவது. அதாவது இறைவனுக்கு சமமான நிலையை அடைவதைக் குறிக்கும். இந்த முக்திநிலைதான் பேரின்பமாகும்.
“இனியொரு பிறவியே இல்லாத முக்தி நிலையை அடைவதே பிறவியின் நோக்கம்’ என்று நமது சாத்திரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த தெய்வீக நிலைக்கு மெய்ஞானம் (ஆன்மீகம்) வழி காட்டுகிறது.
இது தான் ஆன்மீக வாழ்க்கையின் மிக உயர்ந்த நிலை. இதை அடைவது என்பது எளிதான விஷயமல்ல. அது ஒரு பிரபஞ்ச ரகசியம். அந்த ரகசியத்தை மனித நிலையில் உணர முடியாது. இன்றைய விஞ்ஞான அறிவு மற்றும் கருவிகளாலும் அறிய முடியாது. ஆனால் தெய்வீக நிலையால் உணரலாம்.
விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டும் முரண்பாடானவை அல்ல. விஞ்ஞானம் என்பது நம் உடலுக்கு வெளியில் உள்ள உலகத்தை அணு அணுவாக ஆராய்ச்சி செய்வதாகும். மெய்ஞ்ஞானம் என்பது வெளி உலகத்தை விட்டு நம் உடலை (உடலுக்கு உள்ளே உயிரையும்) அணு அணுவாக ஆராய்கிறது.
மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்திநிலையை அடைவதற்கு இரண்டு விதமான வழிகளை இறைவன் வழங்கியுள்ளான். அவை துறவறம் மற்றும் இல்லறம்.
துறவறம் வழியாக முக்திநிலை அடைவது மிகக் கடினமான ஒன்றாகும். இந்த முறையில் மனிதன் தனித்து ஒருவனாகவே முக்தி அடைய முடியும். இந்த வழியில் முக்தி அடைய பலவிதமான வழிமுறைகள் உள்ளது. அவற்றுள் முக்கியமானவை நியமம் தவறாத பூஜை, கடுமையான தவம், தியானம் (ஜபம்), யோகம் பிராணாயாமம் சரயோகம் ஆகியனவாம். இவைகளுக்கு மனக்கட்டுப்பாடு, பயிற்சி, பிரம்மச்சரியம் ஆகியன முக்கியம். எனவே இந்த முறையில் முக்தி அடைவது என்பது அனைவராலும் இயலாது.
இல்லறம் என்பது ஆண், பெண் இருவரும் சேர்ந்து தம்பதிகளாக வாழும் திருமண வாழ்க்கையைக் குறிக்கும்.
இல்லறம் வழியான முக்திநிலை அடைவது மிக எளிமையானது.
ஆனால்
இந்த
முறையில் தனித்து முக்தி
அடைய
இயலாது.
அதற்கு
பெண்களின் உதவி
தேவை.
ஆண்,
பெண்ணுடன் இணைந்து செயல்பட வேண்டும். எனவே
திருமணம் புரிவது அவசியமாகிறது.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் முக்தி நிலை அடைய உதவியாக இருப்பது தாம்பத்யம் மற்றும் காமம். இதுவே ரகசியமான, எளிமையான வழி. இதனால் சுலபமாக மனக் கட்டுப்பாடு அடையவும் முடியும்.